கண்ணம்மாவை விவாகரத்து செய்ய சொல்லும் பாக்கியா, அப்பா பாசத்திற்கு ஏங்கும் லட்சுமி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
கண்ணம்மாவை விவாகரத்து செய்ய சொல்லும் பாக்கியா, அப்பா பாசத்திற்கு ஏங்கும் லட்சுமி - இன்றைய
கண்ணம்மாவை விவாகரத்து செய்ய சொல்லும் பாக்கியா, அப்பா பாசத்திற்கு ஏங்கும் லட்சுமி - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
கண்ணம்மாவை விவாகரத்து செய்ய சொல்லும் பாக்கியா, அப்பா பாசத்திற்கு ஏங்கும் லட்சுமி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாக்கியலட்சுமி பண கஷ்டத்தில் இருக்க கண்ணம்மாவை பார்த்து பேசிடலாம் என கிளம்புகிறார். துளசி கண்ணம்மா பாரதி சேர்ந்து இருக்க வேண்டும் என அறிவுரை சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாக்கியா அவரது கணவரை காணவில்லை என புலம்பி கொண்டிருக்க, போன் வருகிறது. உங்களுக்கு லாட்டரி விழுந்துள்ளது என சொல்ல, பாக்கியா சந்தோசப்படுகிறார். ஆனால் அதன் பின் கடன் கொடுத்தவர் பேசுகிறேன் என சொல்ல, ஒழுங்கா கடனை திருப்பிக் கொடு இல்லையென்றால் என்ன செய்வேன் என தெரியாது என சொல்கிறார். சீக்கிரமாக கொடுத்துவிடுகிறேன் என சொல்ல இதை தான் 3 மாதமாக சொல்கிறாய் என சொல்லி கடனை கொடுக்க சொல்கிறார்.

கண்ணம்மா வீட்டில் குழந்தைகள் போட்டோ பார்த்து சந்தோஷத்தில் இருக்க, துளசி வருகிறார். ட்ரைனிங் முடியவில்லை என துளசி சொல்ல, பாரதியுடன் ஆட்டோவை தூக்கி பிடித்த போட்டோவை காட்டுகிறார். சௌந்தர்யா தான் என்னை படிக்க வைத்தது. அதான் அவங்க செய்த சத்தியத்தை என்னால் மீற முடியாது என சொல்லுகிறார். சரி விடு என கண்ணம்மா சொல்ல, பசங்க பெரியவர்களாக மாறிவிட்டார்கள். இருவரும் சேர்ந்து வாழ என்ன வழி அதை பாருங்க என துளசி சொல்கிறார்.

தமிழகத்தில் தீபாவளிக்கு 2 மணிநேரம் பசுமை பட்டாசுகளை வெடிக்க மட்டுமே அனுமதி – அறிவிப்பு!

வெண்பா கண்ணம்மாவை நினைத்து கோவத்தில் இருக்க, சாந்தி என்ன நடந்தது என கேட்கிறார். வெயிலில் கொஞ்ச நேரம் நின்னுட்டு வந்தேன், அப்படியாவது எனக்கு சூடு சுரணை வருகிறதா என பார்த்தேன் என சொல்ல, வெண்பா கோவத்தில் இருக்கிறார். கண்ணம்மா வீட்டிற்கு பாக்கியா வருகிறார். கண்ணம்மா சந்தோசமாக இருக்க, ஆச்சர்யமாக இருக்கிறது என கேட்கிறார். எப்படி இருக்கிறாள் உன் பொண்ணு எங்கே என கேட்க, போட்டோவை பார்த்து பாக்கியா அதிர்ச்சி அடைகிறார்.

டாக்டர் கூட கோவமாக இருந்தாலும் நீ அவளுடன் தாய் போல பழகுகிற என கேட்கிறார். 8 வருசமா நீ ஒரு பொம்பள புள்ளையை வைத்துக் கொண்டு கஷ்டப்படுகிறாய். நீ துணிந்து முடிவு செய்தால் நல்ல வாழ்க்கை வாழலாம். நீ அந்த டாக்டரை விவாகரத்து செய்துவிடு என பாக்கியா சொல்கிறார். அவரை விவாகரத்து செய்தால் கோடிக்கணக்கில் காசு கிடைக்கும் என சொல்ல, கண்ணம்மா கோபப்படுகிறார். இத்தனை நாளாக இந்த பக்கம் வராமல் இருந்த நீங்க இப்போ யார் சொல்லி வந்திருக்கீங்க என கேட்கிறார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? முக்கிய வலியுறுத்தல்!

யார் சொல்லி வந்தாலும் பரவாயில்லை. ஆனால் இந்த எண்ணத்துடன் நீங்க வரவேண்டாம் என கண்ணம்மா சொல்கிறார். எனக்கு எந்த நல்லதும் பண்ணாத நீங்க இப்போ இதற்காக எதற்கு வந்திருக்கீங்க என கேட்கிறார். என்னுடைய கடைசி நாள் வரை அவர் கட்டுன தாலி என் கழுத்தில் இருக்கும் என கண்ணம்மா சொல்ல, சரி உன்னுடைய இஷ்டம் என பாக்கியா சொல்கிறார். ஹேமா லட்சுமி ஸ்கூலில் நிற்க என் அம்மா இன்னைக்கு சாப்பாடு கொண்டு வருவார்கள் என சொல்கிறார் லட்சுமி.

உடனே ஹேமா எனக்கு என் டாடி கொண்டு வருவார் என சொல்ல, நமக்கு மட்டும் என லஞ்ச் காலையில் கொடுத்துவிடாமல் இருக்காங்க என ஹேமா கேட்கிறார். பின் பாரதி அங்கே வர ஹேமாவுடன் பாசமாக இருக்கிறார். அதை பார்த்து லட்சுமி ஏங்குகிறார். எனக்கும் அப்பா இருந்தால் இப்படி தான் இருக்கும் என நினைத்து பார்க்க, லட்சுமி வருத்தமாக இருப்பதாக பாரதி ஹேமாவிடம் கேட்க, அதெல்லாம் ஒன்றுமில்லை என லட்சுமி சொல்கிறார். பாரதி சாப்பிட கூப்பிட லட்சுமி என் அம்மா வருவாங்க என சொல்கிறார். உடனே பாரதி உடனே இங்கிருந்து கிளம்ப வேண்டும் என நினைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!