தமிழகத்தில் தீபாவளிக்கு 2 மணிநேரம் பசுமை பட்டாசுகளை வெடிக்க மட்டுமே அனுமதி – அறிவிப்பு!
தமிழகத்தில் நவம்பர் 4 ம் தேதி தீபாவளி பண்டிகையன்று 6-7 மணி வரையும், மாலை 7-8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்து காலநிலை மாற்றத் துறை அனுமதி அளித்துள்ளது.
பட்டாசு வெடிக்க அனுமதி :
இந்தியா முழுவதும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனால் மக்களால் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க கடை வீதிகளுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். போக்குவரத்து நெரிசல்களும் ஏற்பட்டு வருகிறது. கொரோனா தொற்று முழுமையாக குறையாத நிலையில் அதிகரிக்கும் மக்கள் கூட்டம் மீண்டும் நோய் தீவிரமெடுக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.
Jio Phone Next அசத்தலான அம்சங்களுடன் அறிமுகம் – தீபாவளி முதல் விற்பனை! EMI முழு விபரம் இதோ!
இந்த நிலையில் மத்திய அரசு பண்டிகை காலங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதன் பேரில் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றனர். தீபாவளி என்றாலே பட்டாசு தான் அதிகம் பட்டாசு வெடிப்பதால் அதிலிருந்து வெளிவரும் புகை காற்றை மாசடைய செய்கிறது. மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் உடல் நல கோளாறுக்கும் ஏற்படுகிறது. பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் சத்தம் பெரும் இரைச்சலை உண்டாகிறது.
நீட் UG தேர்வு முடிவுகள் 2021 – விரைவில் ஸ்கோர் கார்டு வெளியீடு! மாணவர்கள் எதிர்பார்ப்பு!
இதனால் ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் தீபாவளி அன்று காலை 6-7 மணி மற்றும் மாலை 7-8 மணி வரை, மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் மேலும் பசுமை பட்டாசுகளை வெடிக்க மட்டுமே அனுமதி என சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது. ஒலி மாசு ஏற்படுத்தும் சர வெடிகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. மருத்துவமனை, பள்ளி, நீதிமன்றம், மத வழிபாட்டு தலம் அருகில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.