பான் – ஆதார் இணைப்பு – ஜூன். 30 கடைசி நாள்.. உடனே இந்த வேலையை முடிங்க!
இந்தியாவில் ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்க ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசம் விரைவில் முடிவடையுவுள்ளது. அதனால் விரைந்து பான் – ஆதார் இணைப்பு பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆதார் – பான்:
இந்தியாவில் வரி ஏய்ப்பை தடுக்கவும் பணப்பரிமாற்றத்தில் நடைபெறும் மோசடிகளை குறைக்கவும் வருமான வரித்துறையினரால் பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இன்றைக்கு வங்கிகள் மற்றும் பிற பண பரிவர்த்தனைகளில் பான் கார்டு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்த பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வேலையை முடிப்பதற்கு பல முறை கால அவகாசமும் வழங்கபட்டுள்ளது.
SSC Group A வேலைவாய்ப்பு 2023 – Level-12ன் படி ஊதியம்!
தற்போது ரூ.1000 அபராதம் செலுத்தி ஜூன் 30-ம் தேதி வரை பான் மற்றும் ஆதார் இணைப்பு பணியை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட கால் அவகாசம் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. அதனால் விரைந்து பான் – ஆதார் அட்டையை இணைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இந்த வேலையை முடிக்காமல் விட்டால் எதிர்காலத்தில் உங்களது பான் கார்டு செயலிழந்து போகக்கூடும்.