திறப்பு விழாவுக்கு தயாராகும் புதிய ரயில் பாலம்.. பிரதமருக்காக செய்யப்பட்ட சிறப்பு ஏற்பாடுகள்.
1914 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட பழைய பாம்பன் ரயில்வே கடல் வழி பாலத்தின் ஏற்பட்ட அதிகப்படியான அதிர்வின் காரணமாக ரயில் சேவைகள் டிசம்பர் 2022 இல் நிறுத்தப்பட்டன. மேலும், பழைய பாலத்திற்கு இணையாக புதிய பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்த பலமானது 2.07 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்தியாவின் முதல் செங்குத்தான லிப்ட் முறையில் இயங்கும் வடிவில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த புதிய பாலம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, “ரூ.545 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பாம்பன் புதிய பாலத்தை ஏப்ரல் 6 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், அவர் பாம்பனில் உள்ள பழைய மற்றும் புதிய ரயில் பாலங்கள் இரண்டையும் பார்வையிடுவார் என்றும், பின்னர் புதிய பாலத்தில் இயக்கப்படும் முதல் ரயிலில் பயணம் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திறப்பு விழாவில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு கருதி கடலோர காவல்படை இன்று பாலங்களுக்கு இடையே கப்பலை செல்ல வைத்து ஒத்திகை செய்யப்பட்டது”.


























