தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொட்டல முறை – முக்கிய தகவல் வெளியீடு!
தமிழக ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படும் முறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளதாக உணவு வழங்கல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் ரேஷன் கடைகளில் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் தகவல் தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடை :
தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் மூலம் ரேஷன் அடைத்தாரர்கள் மலிவு விலையில் மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை பெற்று வருகின்றனர். கடந்த ஊரடங்கு மாதங்களில் மாநில அரசு ரேஷன் கடைகள் மூலம் நிவாரண பொருட்களை வழங்கியது. இதன் மூலம் ஏராளமான ஏழை எளிய மக்கள் பயனடைந்தனர். அரசால் வழங்கப்படும் குடும்ப அட்டைகள் 5 வகைகளாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்பப்படுகிறது. அதாவது இது குடும்ப தலைவரின் வருமானத்தை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது இந்தியா முழுவதும் வேலைக்காக இடம் பெயரும் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெளுத்து வாங்கும் கனமழை – வானிலை மையம் அறிக்கை!
இந்த நிலையில் தமிழக அரசு ரேஷன் கடைகளில் ‘வைபை’ வசதி கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது ரேஷன் கடைகளில் பொருட்களை பொட்டலமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். நேற்று திருவாரூர் மாவட்டத்தில் குளக்கரை கிராமத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் திறப்பு விழாவில் பங்கேற்ற உணவு வழங்கல் துறை அமைச்சர் பங்கேற்றார். அப்போது பேசிய அமைச்சர் மாநிலம் முழுவதும் அனைத்து நியாய விலை கடைகளில் சொந்த கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் முழு நேர நியாய விலைக் கடைகளை ரூ.10 லட்சம் மதிப்பிலும் பகுதி நேர கடைகளை ரூ.7 லட்சம் மதிப்பிலும் கட்ட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதே போல ஆட்சி பொறுப்பேற்ற 14 மாத காலத்தில் சுமார் 12 50,000 ரேஷன் குடும்பங்கள் புதிதாக வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தற்போது மாநிலம் முழுவதும் 2,22,000 குடும்ப அட்டைகள் இருந்து வரும் நிலையில் ரேஷன் பொருட்களை இனி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பாக்கெட்டில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.