நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிப்பு – பிரதமர் மோடி உத்தரவு!!
கொரோனா அவசர கால பயன்பாட்டுக்கு வசதியாக நாடு முழுவதும் தேவையான அளவு ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என இந்திய பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
ஆக்சிஜன் உற்பத்தி:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. ஒரு நாளில் 3 லட்சம் வரை புதிய பாதிப்புகள் ஏற்படுகிறது. பலி எண்ணிக்கையும் சற்றே உயர்ந்து வருகிறது. மாநில அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி போதிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், நோய்த்தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இந்த நோய் தடுப்பின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
அதே நேரத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு போதிய ஆக்சிஜன் வசதி இல்லாத காரணத்தால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. நேற்று மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஆக்சிஜன் வழங்குவதில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகள் உயிரிழக்க நேரிட்டது. அது போல மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் குறைவாக உள்ளது எனவும், ஆச்சிஜன் தட்டுப்பாடுகள் நிலவுகிறது எனவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை விளக்கம்!!
இது குறித்த வழக்கின் போது டெல்லி உயர் நீதிமன்றம், ‘நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்து கொடுப்பது அரசின் கடமை. ஏதாவது செய்து மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன் சப்ளை செய்யுங்கள்’ என மத்திய அரசுக்கு தெரிவித்தது. இதை தொடர்ந்து உயர்மட்ட குழு அதிகாரிகளுடன் பிரதமர் மோடி நடத்திய ஆலோசனை கூட்டத்தில், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாநிலங்களுக்கு தேவையான ஆக்சிஜனை விமானங்கள் மூலம் அனுப்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.