தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை விளக்கம்!!

0
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு - கல்வித்துறை விளக்கம்!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு - கல்வித்துறை விளக்கம்!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை விளக்கம்!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளுக்கு பிறகு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  புதிய தேதி அறிவிக்கப்படும் குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னர் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என கூறப்படுகிறது.

மாணவர்களுக்கு விடுமுறை

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாணவர்களுக்கான தேர்வுகள் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டு வந்தது. பள்ளிகளில் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு +2 மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

TN Job “FB  Group” Join Now

பொதுத்தேர்வுக்கு முன்னதாக மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 16 ஆம் தேதி துவங்கி 23 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகளில் 7000 பள்ளிகளை சேர்ந்த 2 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழக அரசு அறிவித்த கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது.

ஆதார் சம்பந்தமான சந்தேகங்கள் உண்டா? அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு!!

எனவே ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நிலவி வந்தது. அதனால் மே 3 ஆம் தேதி நடக்க வேண்டிய பொதுத்தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. செய்முறை தேர்வுகள் முடிந்த பிறகு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வந்தது. இந்நிலையில் செய்முறை தேர்வுக்கு பிறகு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களை மாணவர்கள் தேர்வுக்காக பயன்படுத்தும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னர் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!