தமிழகத்தில் ஆக்ஸிஜன் படுக்கைகள் இருப்பு நிலவரம் – கொரோனா சிகிச்சை வசதிகள் அதிகரிக்கப்படுமா??
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவர்களுக்கான ஆக்ஸிஜன் படுக்கைகள் நிலவரம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆக்ஸிஜன் படுக்கைகள்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்து வருவதால் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகள் கிடைப்பதிலும் சிக்கல்கள் உள்ளது. பல மருத்துவமனைகளின் வெளியிலும், ஆக்ஸிஜன் படுக்கைகள் கோரி நோயாளிகள் வெளியில் காத்திருக்கின்றனர். தமிழகத்தில் மொத்தம் 65,021 படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 35,381 பேர் அதில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் பகல் 12 மணி முதல் அனைத்து கடைகளும் அடைப்பு – புதிய கட்டுப்பாடுகள் அமல்!!
இதில் மொத்தம் 30,635 ஆக்ஸிஜன் படுக்கைகள் உள்ளது. அவற்றில் தற்போது 12,520 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 18,115 ஆக்ஸிஜன் படுக்கைகள் தமிழகத்தில் காலியாக இருப்பதாக சுகாதாரத்துறை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் பல இடங்களில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் படுக்கைகள் இல்லாமல் அவதிப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்டு மூச்சுத் திணறல் உள்ள நோயாளிகள் பலர் ஆக்ஸிஜன் படுக்கையாக அவரச ஊர்திகளில் காத்திருக்கும் சூழல் பல அரசு மருத்துவமனைகளில் நேர்கிறது. இதனால் தமிழகத்தில் கூடுதலாக 20,000 ஆக்ஸிஜன் படுக்கைகள் மற்றும் சென்னையில் மட்டும் 10,000 ஆக்ஸிஜன் படுக்கைகளையும் உடனடியாக அரசு தயார்படுத்த வேண்டும். இல்லையென்றால் தமிழகத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்