தமிழகத்தில் பகல் 12 மணி முதல் அனைத்து கடைகளும் அடைப்பு – புதிய கட்டுப்பாடுகள் அமல்!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மேலும், ஞாயிறு அன்று முழு அடைப்பும் அமலாக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், நோய் தொற்றின் தாக்கம் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தமிழக அரசு மே 6ம் தேதி முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக அறிவித்தது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!
அதன்படி, காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே மளிகை, பால், போன்ற அத்தியாவசிய கடைகள் திறக்கப்படும் என்றும், உணவகம் மற்றும் மருந்து கடைகள் இரவு 9 மணி வரையும் செயல்படும் என்றும் அறிவித்தது. இந்நிலையில் இன்று புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் அமலுக்கு வந்துள்ளது. 12 மணியுடன் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு விட்டது.
உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் பார்சல் சேவைகள் மட்டும் வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற ஜவுளி கடைகள், பாத்திரக் கடைகள், எலக்ட்ரானிக் கடைகள் உள்ளிட்டவை அனைத்தும் மூடப்பட்டுள்ளது. உத்தரவை மீறி வெளியில் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்ய இருப்பதாக காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்