உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பட்டியலை தயார் செய்ய உத்தரவு – ICC அறிவிப்பு!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் தயார் செய்யும்படி ICC அறிவுறுத்தியுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்
2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற இருப்பதாக ஐசிசி அறிவித்திருக்கிறது. மேலும், இந்த உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் நிலையில் ஒவ்வொரு அணிகளும் தகுதியான வீரர்களை தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்தில் நாளை (ஜூலை 20) மின்தடை செய்யப்படும் பகுதிகள் – முக்கிய விவரம் இதோ!
மேலும், அக்டோபர் 15ஆம் தேதி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், தற்போது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் கட்டாயமாக ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. எனவே, இன்னும் திறமையான வீரர்களின் பட்டியலை ஒப்படைப்பதற்கு ஒரு மாத காலம் மட்டுமே இருப்பதால் அனைத்து அணியினரும் இறுதிக்கட்ட பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.