12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் தகவல்!
12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் தகவல்!
12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

கேரளாவில் கடந்த 2 மாதங்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் கேரளாவின் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆரஞ்சு அலர்ட்:

கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு மழை சற்று முன்னதாகவே பெய்யத் தொடங்கியது. அதனால் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தண்ணீர் அதிகம் தேங்கியுள்ள பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கேரளாவில் பெய்த கனமழையால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. மேலும் திருவனந்தபுரம் உட்பட 8 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்தது. அதனை தொடர்ந்து இன்று பெய்து வரும் கனமழை காரணமாக கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – விடைத்தாள் நகல் வெளியீடு!

அதனால் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலச்சரிவால் பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் வேறு இடங்களுக்கு செல்லவும், ஆற்றுப்பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் தற்போது தயார் நிலையில் இருந்து வருகின்றனர். இந்த ஓணம் பண்டிகை காலத்தில் அதிக கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!