தமிழகத்தில் 12ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – விடைத்தாள் நகல் வெளியீடு!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான துணை தேர்வு கடந்த ஆகஸ்டில் 1 நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் நாளை வெளியாகும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தேர்வு முடிவு:
தமிழகத்தில் 2021 – 2022 ம் கல்வியாண்டில் 1 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு கடந்த மே மாதம் 2ம் தேதி தொடங்கி மே 13ம் தேதியுடன் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து 10,11,12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் சுமார் 6,49,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல் தெரிவித்தது. இதில் 12ம் வகுப்பில் மட்டும் மொத்தம் 8,06,277 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
மீதமுள்ள மாணவர்களில் சிலர் தேர்வில் பங்கேற்கவில்லை சிலர் தேர்ச்சி பெறவில்லை. இதனையடுத்து தேர்ச்சி பெறாதவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் துணைத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவு கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிடப்பட்டது. அப்போது மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. துணைத் தேர்வில், தகுதியான மதிப்பெண் வழங்கவில்லை என்று கருதுபவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
சென்னை: நகை வாங்க சரியான நாள் இது தான் – தங்க விலை அதிரடி சரிவு!
மேலும் தேர்வர்கள் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் வாயிலாக ஆகஸ்ட் 24,25ம் தேதிகளில் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். இவர்களின் விடைத்தாள் நகல் இன்று (செப் .07) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதிலும் சந்தேகம் உள்ளவர்கள் மேலும் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் செப்டம்பர் 8,9,10 ஆகிய தேதிகளில் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்