மே 29 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!
அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் மே 29ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாக கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதியுடன் பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில் ஏப்ரல் பதினொன்றாம் தேதியிலிருந்து மே 28ஆம் தேதி வரைக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வரும் மே 29ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் திறக்கப்படும் என கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய அரசின் PLI திட்டம் – சுமார் 2.75 பேருக்கு வேலைவாய்ப்பு… மத்திய அமைச்சர் தகவல்!
இதன் பின்னர் ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பழைய பாடத்திட்டங்களை கற்பிக்க வேண்டும். ஜூன் 1 முதல் ஜூன் 15ஆம் தேதி வரைக்கும் 4,6,7 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பழைய பாடத்திட்டத்தை கற்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழக்கமாக பாடங்களை ஆசிரியர்கள் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.