மத்திய அரசின் PLI திட்டம் – சுமார் 2.75 பேருக்கு வேலைவாய்ப்பு… மத்திய அமைச்சர் தகவல்!
இந்தியாவில் ஏற்றுமதி ஊக்குவிக்கும் வகையில் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு:
இந்தியாவில் மேக் இன் இந்தியா எனும் திட்டத்தில் கீழ் ஏற்றுமதி ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்க தொகை (PLI) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் கடந்த 2020ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த திட்டத்தின் 2ம் கட்டத்திற்கு தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் இது இல்லை – வெளியான முக்கிய அறிவிப்பு!
இத்திட்டத்தின் நோக்கம் உலக அளவிலான வணிக நிறுவனங்களை ஈர்ப்பது மற்றும் மடிக்கணினி போன்றவற்றின் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதாகும். மேலும் இத்திட்டத்தின் மூலம் 75,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும் 2 லட்சம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download