தமிழக ரேஷன் கடைகளில் இது இல்லை – வெளியான முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கருப்பட்டி விற்பனை செய்வது குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் அது குறித்து பனைத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
ரேஷன் கடைகள்
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரசு சார்பில் இலவச மளிகை பொருள்கள் வழங்கப்படுகிறது. முன்னதாக ரேஷன் கடைகளில் கருப்பட்டி வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியானது. ஆனால், ரேஷன் கடைகளில் விற்பனை செய்யும் அளவிற்கு கருப்பட்டி உற்பத்தி இல்லை என பனை தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சி வெள்ளத்தில் மாநில அரசு ஊழியர்கள் – 6% அகவிலைப்படி நிலுவைத்தொகை விடுவிப்பு!
இது குறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் கடந்த ஓராண்டாக பனை மரத் தொழிலாளர்களுக்கான நலவாரியம் புத்துயிர் பெற்று செயல்பட்டு வருகிறது. மேலும் கடந்த ஆண்டில் 20 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் வாரியத்தில் சேர்ந்துள்ளனர். பனை மரங்களை வெட்டக் கூடாது என தமிழக சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அப்படி வெட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று வெட்ட வேண்டும். அதனால் ரேஷன் கடைகளில் கருப்பட்டி விற்பனை செய்யப்படும் அளவிற்கு உற்பத்தி இல்லை. ஆனால் பதநீர் உள்ளிட்ட பனை பொருட்களை தனியாக ஸ்டால்கள் அமைத்து விற்பனை செய்யும் திட்டம் முதல்வர் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download