ராதிகாவை வீட்டை விட்டு போக சொல்லும் கோபி – “பாக்கியலட்சுமி” சீரியல் ப்ரோமோ!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், திடீரென கோபி ஈஸ்வரிக்காக ராதிகாவை வெளியே போக சொல்கிறார்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரி தினமும் ராதிகாவைஅவமானப்படுத்திக் கொண்டே இருந்தாலும், அவர் கோபிக்காக எல்லாவற்றையும் பொறுத்துக்க கொள்கிறார். இந்த கோபத்தினால் ராதிகா ஆபிசில் வைத்து பாக்கியாவை அவமானப்படுத்துகிறார். அதனால் பாக்கியா கோடிஸ்வரனிடம் ராதிகாவை மாட்டி விடுகிறார். மேலும் ஈஸ்வரியிடம் ஆபிசில் நடந்ததை சொல்ல, ஈஸ்வரிக்கு பயங்கர கோவம் வருகிறது. அதனால் ஈஸ்வரி ராதிகாவை ஒரு வழி செய்ய வேண்டும் என காத்திருக்கிறார்.
அந்த நேரம் ராதிகா வர ஈஸ்வரி பாக்கியாவை சரியாக வேலை செய்ய விடாமல் ஏன் இப்படி செய்கிறாய் என கேட்கிறார். இனிமேல் இப்படி பிரச்சனை செய்தால் உன்னை உண்டு இல்லை செய்து விடுவேன் எனவும் மிரட்டுகிறார். அந்த நேரம் கோபி வர ராதிகா இப்படி தான் என்னை மிரட்டுகிறார்கள் என புகார் செய்கிறார். ஆனால் கோபி ஈஸ்வரிக்கு ஆதரவாக பேசுகிறார். எப்போது பார்த்தாலும் வீட்டில் சண்டை, இனிமேல் நீ இங்கே இருக்க வேண்டாம், நான் தான் நிம்மதியாக இல்லை என் குடும்பமாவது நிம்மதியாக இருக்கட்டும் என கோபி சொல்ல, ராதிகா தலையில் இடி விழுகிறது. மேலும் அவர் வீட்டை விட்டு செல்வது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
Exams Daily Mobile App Download