அதிகரிக்கும் பண மோசடி – உடனே செய்ய வேண்டியது என்ன? வழிமுறைகள் இதோ!
வங்கியிலிருந்து உங்களுக்கே தெரியாமல் உங்களது பணம் எடுக்கப்படும் நிகழ்வு அவ்வப்போது நிகழ்கிறது. இது போன்ற குறுஞ்செய்திகளை நீங்கள் பார்த்திருக்கலாம். இப்படி நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
பணம் கையாடல்:
இன்றைக்கு வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் வாயிலாக பெரும்பாலானோர் பண பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இந்த சூழலில் வங்கி வாடிக்கையாளருக்கே தெரியாமல் அவரது கணக்கில் பணம் எடுக்கப்பட்டு விடுகிறது. திடீரென உங்க வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாக வரும் குறுஞ்செய்தியை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.
மிக்ஜாம் பாதிப்பில் மீள ஒரு மாத ஊதியம் வழங்கிய முதல்வர் – வெளியான அறிவிப்பு!
உங்களது அனுமதியின்றி வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டால் உடனடியாக நீங்கள் உடனடியாக உங்களது வங்கி கிளையே தொடர்பு கொண்டு ஊழியர்களுக்கு தெரிவிக்கவும். சைபர் கிரைம் போலீசில் புகார் செய்ய வேண்டும். அத்துடன் ஆன்லைன் மூலம் நடைபெறும் இணைய மோசடி பக்கத்திலும் புகார் அளிக்கவும். மேலும் FIR பதிவு செய்து நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம்.