நீர் ஆதாரங்கள் மேம்பாட்டுக்கு ரூ.340 கோடி! தடையற்ற குடிநீர் விநியோகத்திற்கு முதல்வர் விஜய் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை இயல்பைவிடக் குறைவாக பதிவாகியுள்ள நிலையில், குடிநீர் தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும் ரூ.340 கோடி நிதியை ஒதுக்கி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய அம்சங்கள்
- ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு
- நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகள் மூலம் நீர் ஆதார மேம்பாட்டு பணிகள்
- தேவையான இடங்களில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்
- ஆழ்துளைக் கிணறுகள் தூர்வாருதல், பழுதடைந்த குழாய்கள் மற்றும் மின் உபகரணங்களை சீரமைத்தல்
- மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மற்றும் குறுவை சாகுபடி நிலை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
ரூ.340 கோடி எதற்காக?
அரசு வெளியிட்ட தகவலின்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகள் மூலம் நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும், லாரிகள் மூலம் குடிநீர் வழங்கவும் ரூ.330 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைக்கு ரூ.10 கோடி வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.340 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் அறிவுறுத்தல்கள்
மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் தடையின்றி நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ளவும், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நேரடியாக ஆய்வு மேற்கொள்ளவும் முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.



























