அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கிடையாது? மத்திய அமைச்சர் அதிரடி!

0
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கிடையாது? மத்திய அமைச்சர் அதிரடி!
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கிடையாது? மத்திய அமைச்சர் அதிரடி!
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கிடையாது? மத்திய அமைச்சர் அதிரடி!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மீண்டும் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் NPS நிதியை மாநில அரசுகளுக்கு வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டம்:

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004ம் ஆண்டு புதிய ஓய்வூதிய திட்டம் (NPS) கொண்டு வரப்பட்டது. இதனை ரத்து செய்ய வலியுறுத்தி தற்போது வரை ஊழியர்கள் போராடி வருகின்றனர். இது குறித்து பேசிய மத்திய அரசு தற்போதைய நிதி நிலையில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வராது என்று தெரிவித்துள்ளது.

அரசு அங்கன்வாடி ஊழியர்களுக்கு பரிசோதனை – கேரளா அரசு அறிவிப்பு!

மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால் வரும் ஆண்டில் நாட்டின் நிதி நிலை பாதிக்கப்படும் என்று மத்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் ராஜஸ்தான், ஜார்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இது குறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தேசிய பென்ஷன் திட்டத்தில் உள்ள பணம் மாநில அரசுகளுக்கு வழங்கப்படாது. அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெறும் போது அவர்களுக்கு நேரடியாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் மாநில அரசுகள் தனது திட்டங்களை செயல்படுத்த தனது சொந்த நிதியிலிருந்து நிதி திரட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!