நவம்பர் முதல் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் – சென்னை பல்கலை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படாது என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
ஆன்லைன் தேர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டது. இந்த நிலைமையை சரி செய்ய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதில் ஒன்றாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு கற்றல் திறன் பெரிதும் பாதிக்கப்பட்டது. கடந்த 1 ஆண்டாக கல்லூரிகள் திறக்காமல் ஆன்லைன் வாயிலாக தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளது.
WhatsApp பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு – புதிய பேமண்ட் வசதி ஸ்டிக்கருடன் அறிமுகம்!
இதனால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை வழங்கி உள்ளது. அதன் படி பள்ளி மற்றும் கல்லூரிகள் படிப்படியாக திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருகிற நவம்பர் மாதம் முதல் இளநிலை மற்றும் முதுகலை பட்டபடிப்புகளுக்கான அனைத்து பருவத் தேர்வுகளும் நேரடியாகவே நடத்தப்படும். ஆன்லைன் மூலம் நடத்தப்படாது என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ் – முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு!
இது குறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ். கௌரி கூறுகையில், நவம்பர் மாதம் முதல் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் பருவத் தேர்வுகளை நேரில் வந்து வகுப்பறைகளில் பழையபடி எழுதுவார்கள். மேலும் கல்லூரிகளில் நேரடி தேர்வுகள் நடத்தப்படும் போது அனைத்து கல்லூரிகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.