பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்..!! தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள்..!!
சென்னையில் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது. மேலும், அதை கண்காணிக்கும் பணியில் அதிகாரிகளை ஈடுபடுத்தி தற்போது சென்னையில், விதிகளை மீறி குப்பை கொட்டுபவர்கள் மற்றும் எரிப்பவர்களிடம் இருந்து உடனடியாக அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அதிகாரிகள் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணித்து அபராதம் விதித்து வருவதாகவும் மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
அரியானா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்.. மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி!!


























