
மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !! தேசிய கல்வி உதவித்தொகைக்கு கால அவகாசம் நீட்டிப்பு..!! மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தகவல்..!!
இந்தியாவில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவும் விதமாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் திறமையான மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை என்ற திட்டத்தை 2009ம் ஆண்டு அறிமுகப்படுத்தி, மாணவர்களை மேற்படிப்பு தொடர வழிவகை செய்து வருகிறது. மேலும், பிளஸ் 2 முடித்து கல்லூரி படிப்பில் இணைந்துள்ள மாணவ, மாணவிகளில் தகுதியானவர்களுக்கு, இளங்கலை படிப்புக்கு 10 ஆயிரம் ரூபாயும், முதுகலை படிப்புக்கு 20 ஆயிரம் ரூபாயும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் இனி இந்த பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம்.. வெளியான சூப்பர் அறிவிப்பு!!
அந்த வகையில், 2024 மார்ச், ஏப்ரலில் நடந்த மேல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று நடப்பு கல்வியாண்டில் உயர் கல்வி பயிலும் மாணவ மாணவியர்களை தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க அக்டோபர் 31ம் தேதி வரை கால அவகாசத்தை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நீட்டித்துள்ளது. மேலும், இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள EXAMSDAILY என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
























Thank you for the government helping