தமிழகத்தில் ஒன்றியங்களே ஆவின் பால் பாக்கெட் விலையை உயர்த்த தடை? அரசுக்கு வேண்டுகோள்!
தமிழகத்தில் தற்போது ஆவின் பால் விலையை அந்தந்த ஒன்றியங்களே உயர்த்திக் கொள்ளலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் தற்போது பால் பாக்கெட்டின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால், ஒன்றியத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
பால் பாக்கெட் விலை:
தமிழகத்தில் தற்போது சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றின் காரணமாக சாமானிய மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இந்த பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் ஆவின் பால் விலையை மீண்டும் அரசு உயர்த்த இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளதாவது, தற்போது ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்துள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
ஆனால் ஆவின் பொருட்களின் விலை மற்றும் ஆரஞ்சு நிற பாலின் விலையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் தற்போது மத்திய அரசு நிதிநிலைக்கு தகுந்தவாறு பால் விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் தற்போது ஆவின் பொருட்கள் தட்டுப்பாடின்றி எளிதில் கிடைப்பதில்லை. மேலும் பச்சை வண்ண பால் பாக்கெட்டின் விலை இனி ஒரு லிட்டருக்கு 40 பைசா உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பிப். 10 (நாளை) அரசு பள்ளிகளுக்கு விடுமுறை – அறிவிப்பை வெளியிட்ட புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை!!
இதனால் மொத்த விற்பனையாளர்கள் லிட்டருக்கு ரூ.1 எனவும் சில்லறை விற்பனையாளர்கள் லிட்டருக்கு ரூ.2 எனவும் உயர்த்துவார்கள். அதனால் நிதிநிலைக்கேற்ப அந்தந்த ஒன்றியங்களே பால் விலையை உயர்த்திக் கொள்ள தடை விதிக்க வேண்டும் என்றும் ஆவின் பொருட்கள் எளிதில் மக்களை சென்றடைய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.