தமிழகத்தில் அறிவித்தபடி 10, 12ம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் தற்போது 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் வெளியானதை தொடர்ந்து திருப்புதல் தேர்வு பற்றி பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திருப்புதல் தேர்வு:
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் தொற்று காரணமாக அதிகரிக்க தொடங்கியது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியது. இதனை தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. அத்துடன் அப்போது நடைபெற இருந்த 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வுகளும் தள்ளி வைக்கப்ட்டது
விஜய் டிவி முன்னணி சீரியல்களில் நேர மாற்றம் – இரண்டாவது ப்ரோமோ ரிலீஸ்!
தற்போது தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து முதல் திருப்புதல் தேர்வுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டு பொதுத்தேர்வு போல் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி திருப்புதல் தேர்வுகள் கடந்த 9ம் தேதியிலிருந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.
HCL நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி நாள்!
இந்த நிலையில் திருப்புதல் தேர்வுக்கான சில வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இதையடுத்து துறை ரீதியாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போலூர், ஆக்சிலியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் வந்தவாசி, ஹாசினி இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் வினாத்தாள் வெளியானது கண்டறியப்பட்டது. இதற்கு உடந்தையாக இருந்த நபர்கள் மீதும் பள்ளி நிர்வாகம் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் திருப்புதல் தேர்வு கால அட்டவணையில் குறிப்பிட்டவாறு நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.