திருப்பூரில் இன்று மற்றும் நாளை குடிநீர் விநியோகம் கிடையாது – பராமரிப்பு பணிகள் எதிரொலி!

0
திருப்பூரில் இன்று மற்றும் நாளை குடிநீர் விநியோகம் கிடையாது - பராமரிப்பு பணிகள் எதிரொலி!
திருப்பூரில் இன்று மற்றும் நாளை குடிநீர் விநியோகம் கிடையாது - பராமரிப்பு பணிகள் எதிரொலி!
திருப்பூரில் இன்று மற்றும் நாளை குடிநீர் விநியோகம் கிடையாது – பராமரிப்பு பணிகள் எதிரொலி!

தமிழகத்தில் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடுகள் ஏற்படாத வகையில் குடிநீர் குழாய்கள் சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் பராமரிப்பு:

தமிழகத்தில் குடிநீர் திட்டம் முன்னுரிமை பெற்ற ஒரு திட்டமாக விளங்கி வருகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டினால் இதுவரை அவதியுறும் தமிழகத்தில் இந்த ஊரக குடிநீர் வழங்கும் திட்டத்தின் மூலம் மக்கள் அனைவருக்கும் தேவையான தண்ணீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அதாவது ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களில் குடிப்பதற்கு, குளிப்பதற்கு மற்றும் துவைப்பதற்கு என்று அனைத்திற்கும் தண்ணீர் வசதி அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில் அரசு குடிநீர் ஆதாரங்களை கண்டறிந்து அதனை முறையே பராமரித்து வருகின்றது.

Jio Phone வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – 730 வேலிடிட்டி உடன் புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்!

இந்த பணியானது வருங்கால தலைமுறையினரை நல்ல முறையில் வாழவைக்கும் நோக்கத்தோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து குடிநீர் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து மாவட்டம் தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பழுதான தண்ணீர் குழாய்கள் மாற்றப்பட்டு வருகின்றன. மேலும் தண்ணீர் குழாய்களில் ஏதேனும் சேதங்கள் இருந்தால் அதனையும் சரிசெய்யும் விதமாக இந்த குடிநீர் பராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

MBA படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களின் கவனத்திற்கு – நவ.8ம் தேதி கவுன்சிலிங்!

அந்த வகையில் திருப்பூர் மாநகராட்சி 3 வது குடிநீர் திட்டத்தின் கீழ் பராமரிப்பு பணிகள் 1 வது மண்டலத்தில் வார்டுகள் 8,9,10,12 மற்றும் 13, இரண்டாவது மண்டலம், 20 மற்றும் 22 முதல் 30 வார்டு வரை. மூன்றாவது மண்டலம், 31,32 மற்றும் 40 முதல் 45 வார்டு வரை, நான்காவது மண்டலம் வார்டுகள் 46 முதல் 51 வரை மற்றும் 56 ஆகிய வார்டுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதனால் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் இருக்காது என்று குடிநீர்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல், சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!