தமிழகத்தில் நாளை (09-04-2025) மின்தடை அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகள் தெரியுமா..??
மின்சாரம் நவீன வாழ்க்கையின் இன்றியமையாத பகுதியாகவும் மற்றும் வாழ்வாதாரத்திற்கான அத்தியாவசிய தேவையாகவும் மாறியுள்ளது. மேலும், மின்சார பயன்பாடு அதிகரிக்கும் நிலையில் தடையில்லா மின்சாரத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில், அரசாங்கத்தால் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது வழக்கம். இந்த பணிகளின் காரணமாக மாதத்தில் ஒரு நாள் மட்டும் குறிப்பிட்ட நேரம் மின் விநியோகம் தடை செய்யப்படும்.
NPCIL நிறுவனத்தில் Executive வேலை – 400 காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!
இந்நிலையில் நாளை (09-04-2025) மின் விநியோகம் தடை செய்யபடுமா என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் மின்சார வாரியம் ஆனது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் பொதுமக்களின் மின் தேவையை கருத்தில் கொண்டு தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முழுவதும் மின்தடை எதுவும் நிகழாது என்று தெரிவித்துள்ளது.


























