தமிழகத்தில் கொரோனா குறித்து அச்சப்பட தேவையில்லை – பொது சுகாதாரத்துறை இயக்குநர்!

0
சிங்கப்பூரில் கொரோனா தாக்கம் மீண்டும் பரவி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை அச்சப்பட தேவையில்லை என தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் கொரோனா தாக்கம் மீண்டும் பரவி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை அச்சப்பட தேவையில்லை என தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

கொரோனா:

கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் உலகமெங்கும் கொரோனா தாக்கம் தீவிரமாக பரவ தொடங்கியது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்பை சந்தித்தது. எனவே மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. தடுப்பூசி செலுத்திய பின் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது. தற்போது கொரோனா தாக்கம் மீண்டும் பரவ தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வு 2024 முக்கிய கேள்விகள் Part 5

சிங்கப்பூரில் கே.பி.2 என்ற புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. சிங்கப்பூரை தொடர்ந்து இந்தியாவிலும் சில இடங்களிலும் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை அச்சமோ, பதற்றமோ தேவையில்லை என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது நல்லது என்றும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!