இனி அரிசி மற்றும் கோதுமை விற்பனைக்கு தடை இல்லை – மத்திய அமைச்சக தகவல்!
மத்திய அரசின் உணவு அமைச்சகத்தின் அதிகாரிகள் தரப்பிலிருந்து உணவு தானிய விற்பனை குறித்த முக்கிய தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
உணவு தானிய விற்பனை:
கோதுமை மற்றும் அரிசி போன்ற உணவு தானியங்களின் விலையானது அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு இவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்திய உணவு கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அசோக் மீனா ஒரு மாநாட்டில் இது தொடர்பாக கோதுமை மற்றும் அரிசியின் திறந்த சந்தை விற்பனை திட்ட மூலம் தானியங்களின் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். அரிசி மற்றும் கோதுமை ஜனவரி 1ஆம் தேதி நிலவரப்படி எப்சிஐ 34.49 மில்லியன் டன் கையிருப்பு இருந்தது.
தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவ படிப்புகள் தொடங்க அனுமதி – வெளியான அறிவிப்பு!
நடப்பு 2023 – 24 ஆம் பயிர் ஆண்டில் நாட்டின் கோதுமை உற்பத்தி 114 மெட்ரிக் டன் அளவை தொட்டு புதிய சாதனை படைக்கும் என்றும், வானியல் இயல்பு நிலையில் அதிகபட்ச கவரேஜ் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். சமீபத்திய விற்பனை விலை கையிருப்பு விலையான ரூபாய் 2129 குவிண்டாளுக்கு எதிராகவும், அக்டோபர் 26ஆம் தேதி உடன் முடிவடைந்த வாரத்தில் அதிகபட்சமாக ரூபாய் 2310 ஆகவும் இருந்தது. மேலும் ஜூன் மாதம் முதல் இதுவரையிலும் 5.87 மெட்ரிக் டன் கோதுமை எப் சி ஐ வாராந்திர மின் ஏலம் முறையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.