தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது – வெளியான திடீர் அறிவிப்பு!
தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மின்கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என மின்சார வாரியம் அறிவித்திருக்கிறது.
மின் கட்டணம்:
தமிழகத்தில் மின் இழப்பை ஈடு செய்வதற்காக கடந்த ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பின் படி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் தமிழகத்தில் மின்வாரியம் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருவதால் மின்கட்டணத்தை அடுத்த மாதம் முதல் உயர்த்தவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும், 4.70 சதவீதம் வரைக்கும் மின்கட்டணம் உயர வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில் மின்கட்டணத்தை உயர்த்த கூடாது எனவும், மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
ECIL Technical Officer வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.50,000/- || தேர்வு கிடையாது!
இந்நிலையில், தமிழகத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பின்படி மின்கட்டணம் உயர்த்தப்படாது எனவும், மின்கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும் மின்சார வாரியம் தற்போது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் நுகர்வோர் விலைக்குறியீடு உயர்வின் அடிப்படையில் 2026 மற்றும் 2027ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்திருந்த நிலையில் தற்போது அந்த தீர்ப்பும் கைவிடப்பட்டிருக்கிறது.