இனி பயணத்தூரத்திற்கேற்ற Toll Tax – விதிமுறையில் முக்கிய மாற்றம்!! நிதின் கட்கரி தகவல்!!
நாட்டில் நெடுஞ்சாலையைப் பயன்படுத்த பொதுமக்கள் சுங்க வரியை செலுத்தி வருகின்றனர். இதில் புதிய மாற்றங்களை கொண்டு வர இருப்பதாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார்.
சுங்க வரி:
இந்தியாவில் அதிவேக நெடுஞ்சாலை அல்லது நெடுஞ்சாலையைப் பயன்படுத்த வேண்டுமெனில் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும். இதே போன்று ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலம் செல்வதற்கும் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நிலையில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சுங்க கட்டண விதிமுறையில் வர இருக்கும் புதிய மாற்றங்கள் தொடர்பாக சில தகவல்களை கூறியுள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
இவர் கூறியிருப்பதாவது, நாட்டில் 2024ம் ஆண்டிற்குள் 26 பசுமை விரைவுச் சாலைகள் அமைக்கப்படும் என்றும் சாலைகளின் தரம் வளர்ந்த நாடான அமெரிக்காவுக்கு இணையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல் சுங்க கட்டணம் வசூலிக்க ‘ஜிபிஎஸ்’, நவீன நம்பர் பிளேட்டு ஆகிய புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வர இருப்பதாகவும் கூறியுள்ளார். அத்துடன் டோல் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு தண்டனை அல்லது அபராதம் விதிக்க புதிய மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
ஆதார் அப்டேட் செய்ய கூடுதல் கட்டணம்? பொது மக்களை எச்சரிக்கும் UIDAI!!
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து சுங்க கட்டணத்தில் புதிய மாற்றங்கள் வர இருப்பதாகவும் கூறியுள்ளார். அதாவது தற்போது ஒருவர் 10 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தாலும், அவர் 75 கிலோமீட்டருக்கான சுங்க கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது. இந்த தேவையற்ற செலவை குறைக்கும் வகையில், பயணம் செய்யும் தூரத்திற்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுவதற்கான புதிய விதிமுறை கொண்டு வரப்படும் என கூறியுள்ளார்