ஆதார் அப்டேட் செய்ய கூடுதல் கட்டணம்? பொது மக்களை எச்சரிக்கும் UIDAI!!
ஆதார் ஆணையம் ஆதாரை கட்டாயமாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நிலையில், இதற்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து புகார்கள் பெறப்பட்டுள்ளது.
ஆதார் அப்டேட்:
நாட்டின் தனிநபர் அடையாள ஆணையம் அனைத்து குடிமகன்களுக்கும் ஆதார் அட்டையினை வழங்கி உள்ளது. இந்த ஆதார் அட்டையில் தனி நபரின் பெயர், வயது, பிறந்த தினம், முகவரி, பயோ மெட்ரிக் தரவுகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கும். பிறந்த குழந்தை முதல் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பால் ஆதார் என்ற பெயரில் நீல நிற ஆதார் வழங்கப்படுகிறது.
Follow our Instagram for more Latest Updates
குழந்தைகளின் ஆதார் பதிவை அவர்களின் 5 வயதுக்கு மேல் சென்றவுடன் புதிதாக அப்டேட் செய்ய வேண்டுமென்று முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பெரியவர்களின் ஆதார் விவரங்களையும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் என்று சமீபத்தில் ஆதார் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த புதுப்பித்தலுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக சில புகார்கள் எழுந்துள்ளது.
Google-ன் புதிய அப்டேட்.. இனி Search செய்வது மிக சுலபம் – முழு விவரங்கள் உள்ளே!
Exams Daily Mobile App Download
ஆதார் ஆணையம் இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆதார் சேவைகளுக்காக எந்த ஒரு கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்றும், இது போன்ற புகார்களை 1947 என்ற தொலைபேசி எண் அல்லது [email protected] என்ற மின்னஞ்சலில் முகவரியில் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.