தமிழகத்தில் விரைவில் ஊரடங்கு? – வேகமாக பரவும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் பீதி!
தமிழகத்தில் மர்மக்காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் இன்று காலையில் மட்டுமே 1000க்கும் மேற்பட்ட நோயாளிகள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மர்ம காய்ச்சல்:
தமிழகத்தில் காலநிலை மாற்றத்தினால் நகரின் ஒரு சில பகுதிகளில் திடீரென மழை பொழிவும், திடீரென அதிக அளவில் வெயிலும் கொளுத்தி வருகிறது. இந்தப் பருவநிலை மாற்றத்தினால் கடலூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் பரவி வருவதாகவும் தகவல் வெளியாகிறது. இதனால், கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மர்ம காய்ச்சல் பரவிய நோயாளிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
மேலும், உள்பிரிவு நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதி இல்லாத காரணத்தினால் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ள போதிய இடவசதி இல்லாததால் கடுமையான நெருக்கடி நிலவுவதாக நோயாளிகளின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 வயது வரை திருமணமாகாதவர்களுக்கு ஓய்வூதியம் – முதல்வர் முக்கிய அறிவிப்பு!
இந்நிலையில், இன்று காலையில் மட்டுமே ஆயிரத்திற்கு மேற்பட்ட நோயாளிகள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் கவனமாக இருக்கும் படி பொது சுகாதார மையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மர்ம காய்ச்சல் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா எனவும் பொது மக்களின் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.