60 வயது வரை திருமணமாகாதவர்களுக்கு ஓய்வூதியம் – முதல்வர் முக்கிய அறிவிப்பு!
திருமணம் ஆகாதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் குறித்து அரசு ஆலோசித்து வருவதாக மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியம் அறிவிப்பு
ஹரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டார் நேற்று (ஜூலை 3) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன் படி 45 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட திருமணம் ஆகாதவர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை மாநில அரசு பரிசீலித்து வருகிறது. இந்த திட்டம் குறித்து ஒரு மாதத்திற்குள் அரசு முடிவு செய்யும் எனவும், அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளை (ஜூலை. 04) Power Cut – மின்வாரியம் அறிவிப்பு!
மேலும் கர்னாலில் உள்ள கலம்புரா கிராமத்தில் ‘ஜன் சம்வத்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இது குறித்து தெரிவித்தார். மேலும் பேசிய அவர் கர்னாலில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணைய இணைப்பு வழங்குமாறு துணை ஆணையருக்கு உத்தரவிட்டார். அது மட்டுமில்லாமல் கட்டார் அரசு பள்ளியில் கைப்பந்து மைதானம் கட்டவும், குளத்தை சீரமைப்பது குறித்தும் அறிவித்தார்.