எலான் மஸ்கிற்கு டெஸ்லாவால் உருவாகி இருக்கும் புதிய சிக்கல்…மின்சார கார்களை திரும்பப் பெற முடிவு!
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் நஷ்டத்தில் இருந்த டிவிட்டரை ரூ.3.50 லட்சம் கோடிக்கு வாங்கினார். இந்த நிலையில் இதனை லாபத்திற்கு கொண்டு வர அடுத்தடுத்த முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் இவருக்கு டெஸ்லாவால் சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
ட்விட்டர்
உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள எலான் மஸ்க் சில மாதங்களுக்கு முன்பாக பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரை வாங்கியுள்ளார். இதற்காக இவர் வங்கிகளிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். இந்த கடன்களை திரும்ப செலுத்த நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கும் ட்விட்டரில் சில மாற்றங்களை கொண்டு வந்து அதிக லாபத்தை ஈட்ட இருப்பதாக எலான் மஸ்க் கூறியிருந்தார்.
Exams Daily Mobile App Download
இதற்காக பல புதிய முயற்சியில் இறங்கியுள்ள எலான் மஸ்க் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு மற்றொரு வகையான சிக்கல் உருவாகியுள்ளது. அதாவது அவரின் டெஸ்லா கார் நிறுவனம் தயாரித்த மாடல் 3 மற்றும் மாடல் ஒய் ரக மின்சார கார்களில் பழுது இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த காரை இயக்கும் போது பின்பக்க விளக்குகள் ஒளிர்வதில்லை எனவும் தவறான சமிக்கைகள் இடம் பெற்றுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டைதாரர்கள் இனி பொருட்கள் பெறுவது ஈஸி – UIDAI வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Follow our Twitter Page for More Latest News Updates
அதனால் இதனை சரி செய்யும் பொருட்டு புதிய சாப்ட்வேர் உருவாக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி 3.21 லட்சம் டெஸ்லா கார்களை திரும்பப் பெற்று இதில் புதிய சாப்ட்வேரை பொருத்த திட்டமிட்டுள்ளார். இதனால் டெஸ்லா பங்கு மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. மேலும் பங்குச் சந்தையில் சரிவு, ட்விட்டரில் ஏற்படும் பிரச்சினைகள் உள்ளிட்ட அடுத்தடுத்த சவால்களை எலான் மஸ்க் எதிர்கொண்டு வருகிறார்.