ரேஷன் அட்டைதாரர்கள் இனி பொருட்கள் பெறுவது ஈஸி – UIDAI வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
இந்தியாவில் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வரும் ரேஷன் கார்டு திட்டத்தில் அவ்வப்போது புதிய அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது ஆதார் அட்டையை பயன்படுத்தி பொருட்களை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் பொருட்கள்:
நாடு முழுவதும் மக்கள் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை மலிவு விலையில் பெற்று பயனடைந்து வருகின்றனர்.இந்த நிலையில் ரேஷன் அட்டைதாரர்களின் நலனை கருத்தில் கொண்டும் இந்தியா முழுவதும் வேலைக்காக இடம் பெயரும் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதன் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் எந்த மாநிலத்தில் இருந்து வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். தற்போது நாடு முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் இத்திட்டம் அமலில் உள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஆதார் மூலம் ரேஷன் பொருட்களை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டிப்பு லாபம் தரும் சூப்பர் சேமிப்பு திட்டம் – முக்கிய தகவல்கள் இதோ!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இது குறித்து ஆதார் அமைச்சகம் வெளியிட்ட தகவலில் இனி ஆதார் அடிப்படையில் ரேஷன் பொருட்களை பெறலாம். அதற்கு உங்களின் ஆதார் கார்டு புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போது தான் இந்த வசதியைப் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கார்டில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அது குறித்த விவரங்களுக்கு 1947 என்ற எண்ணை அழைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.