
தமிழகத்தில் உருவாகும் புதிய விண்வெளி ஆராய்ச்சி மையம்..!! விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என இஸ்ரோ தலைவர் அறிவிப்பு..!!
ISRO என்பது இந்தியாவின் தேசிய விண்வெளி ஆய்வு நிறுவனமாகும். மேலும், இது உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இதை தொடர்ந்து, கடந்த மாதம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ISRO வின் புதிய ராக்கெட் ஏவுதளம் பற்றி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, “இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று (05.03.2025) நடைபெற்றது. இதில் ISRO தலைவர் வி. நாராயணன் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். மேலும், இந்த புதிய ராக்கெட் ஏவுதளமானது அடுத்த இரண்டாண்டுகளில் பயன்பாட்டிற்கு வரும் என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, இந்த புதிய ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு குலசேகரன்பட்டினத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் 2,300 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை தமிழக அரசு, இஸ்ரோ நிறுவனத்திற்கு ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது”.























