
சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு புதிய தலைவர் நியமனம்…!! முதல் பெண் தலைவரால் குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கீழ் மொத்தம் 7 மண்டல ஆய்வு மையங்கள் இயங்கி வருகின்றன. அதில், குறிப்பாக தென் மண்டலத்திற்காக சென்னை வானிலை ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. மேலும், தென் மண்டல தலைவராக இதுவரை பாலச்சந்திரன் பணியாற்றி வந்தார். இவர், “இன்றுடன் ஓய்வு பெற இருப்பதால் மூத்த வானிலை விஞ்ஞானி அமுதா நாளை முதல் (28.02.2025) தென் மண்டல தலைவராக” பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு…!! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!!
மேலும், “நாளை முதல் தென் கிழக்கு தமிழக பகுதிகளில் நிலவும் வானிலை நிலவரம் குறித்த தகவல்களை அமுதா ஊடகங்களுக்கு வழங்குவார்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “இவர் கடந்த 1991ஆம் ஆண்டில் இருந்து சுமார் 34 ஆண்டுகளாக வட கிழக்கு பருவ மழை குறித்த தரவுகளை ஆராய்ந்து அதில் முனைவர் பட்டம்” பெற்றுள்ளார். இதையடுத்து, “இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முதல் தென் மண்டல பெண் தலைவர் என்ற பட்டத்தையும் அமுதா பெற்றுள்ளது” குறிப்பிடத்தக்கது.























