அட, தமிழகத்தில் புதிதாக அமையும் தொழில் பூங்கா..!! ” 36,500 வேலை வாய்ப்பு நிச்சயம்”..!!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தீவிர முயற்சியால், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் தொழில் நகரங்களாக உருவெடுத்து வருகிறது. மேலும், இத்தொழிற்சாலைகளின் மூலம் கடந்த மூன்று மாதங்களில் மட்டுமே சுமார் 50,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டியுள்ளது. அந்த வகையில், தற்போது புதிதாக சிவகங்கையில் தொழில் பூங்கா அமைப்பது குறித்த அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடி மற்றும் அரசனுர் கிராமங்களில் ரூ.342 கோடி மதிப்பீட்டில் 775 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைப்பதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. மேலும், இதன்மூலம் 36,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதையும் உறுதி செய்துள்ளது.


























