ஆதார் அட்டை பெற புதிய வழிமுறைகள் – மத்திய அரசின் அறிவுறுத்தல்!
மத்திய அரசு ஆனது கைவிரல் ரேகை மற்றும் கருவிழிப் பதிவு போன்றவை இல்லாத நிலையிலும் ஆதார் கார்டுகளை வழங்குவதற்கான புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
ஆதார் அட்டை:
நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை கட்டாய ஆவணம் ஆக்கப்பட்டுள்ளது. கைவிரல் ரேகை பதிவு மூலமாக மட்டுமே அதை அட்டை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் கை விரல்கள் இல்லாத நபர்களுக்கு ஆதார் கார்டு வழங்குவது குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மத்திய தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இந்த விஷயத்தில் கைவிரல் ரேகை இல்லாதவர்களுக்கு கண் கருவிழி பதிவு மூலம் ஆதார் அட்டை வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் கண் கருவிழி பதிவு மற்றும் கைவிரல் ரேகை பதிவு ஆகிய இரண்டுமே இல்லாத நபர்களுக்கு எந்த ரேகையும் பதிவு செய்யாமலேயே ஆதார் அட்டையினை பெயர், பாலினம் , முகவரி மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்களைக் கொண்டு ஆதார் அட்டைகளை வழங்கலாம்.
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை!!
இதற்காக தனியான வழிகாட்டுதல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த வகையான மக்களுக்கு ஆதார் கார்டு எடுக்கும் பட்சத்தில் ஆதார் வழங்கும் அதிகாரி அரசின் வழிகாட்டுதல்களை உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விதிவிலக்கான இது போன்ற சூழ்நிலைகளில் தினமும் 1000 நபர்களுக்கு ஆதார் பதிவு நடைபெறுவதாகவும், அதேபோல் கைவிரல் ரேகை அல்லது கண்விழி போன்ற இரண்டு வழிகளும் இல்லாமல் இதுவரையிலும் சுமார் 29 லட்சம் பேருக்கு ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தனது செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளது.