இன்று முதல் இலவச பேருந்து பயண திட்டம் – மகிழ்ச்சியில் பெண்கள்!

0
இன்று முதல் இலவச பேருந்து பயண திட்டம் – மகிழ்ச்சியில் பெண்கள்!

மாநிலத்தில் டிசம்பர் 10ஆம் தேதியான இன்று முதல் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இலவச பேருந்து பயணம்:

தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தேர்தலில் வென்று முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசு தெலுங்கானா மாநிலத்தில் அமலுக்கு வந்துள்ள நிலையில் டிசம்பர் 10 ஆம் தேதியான இன்று முதல் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் வாயிலாக பெண்கள், மாணவர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களும் இத்திட்டத்தின் மூலம் பலன் அடைந்து கொள்ள முடியும். மாநிலம் முழுவதும் சுமார் 7200 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை பெற புதிய வழிமுறைகள் – மத்திய அரசின் அறிவுறுத்தல்!

இத்திட்டத்தின்படி மாநிலம் முழுவதும் உள்ள சாதாரண நகர பேருந்துகள் மற்றும் மெட்ரோ எக்ஸ்பிரஸ் சேவைகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம். புஷ்பேக், மெட்ரோ சொகுசு, கருடா பிளஸ் மற்றும் லக்சூரி பேருந்துகள் போன்ற ஏசி சேவைகளில் இத்திட்டம் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பலனடையும் பயனாளிகள் தெலுங்கானா முகவரியுடன் கூடிய அரசாங்க அடையாள அட்டைகளை வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இத்திட்டத்தின் மூலம் பெண்கள் தங்களின் மாதாந்திர செலவில் குறிப்பிடத் தொகையை சேமிக்க முடியும் என்று மகிழ்ச்சியில் உள்ளனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!