தமிழக அரசின் வருவாய் மற்றும் மேலாண்மை துறை ஆனது வாரிசு சான்றிதழ் வழங்குவதில் புதிய நடைமுறைகளை செயல்படுத்த உத்தரவு வெளியிட்டுள்ளது.
வாரிசு சான்றிதழ்:
குடும்பத்தை சேர்ந்த ஒரு நபர் அவரின் இறப்பிற்குப் பின்னர் அவரது சொத்துக்களின் வாரிசுகளை அடையாளப்படுத்துவதற்காக வாரிசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இறந்தவரின் சொத்தின் மீது உரிமை பெறுவதற்கு தகுதியான அனைத்து வாரிசுகளும் இந்த வாரிசு சான்றிதழை வைத்திருக்க வேண்டும். இதனை வைத்து காப்பீட்டின் உரிமை கோறுவது, வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை போன்ற நிலுவைத் தொகைகளை அரசிடம் இருந்து பெறுவது, குடும்ப ஓய்வூதிய அனுமதியை பெறுவது, மாநில அல்லது மத்திய அரசின் ஊழியர் இறந்து விட்டால் அவரின் சம்பள நிலுவைகளை பெறுவது போன்ற பல்வேறு செயல்களுக்கும் வாரிசு சான்றிதழ் ஆவணமாக உள்ளது.
AIASL நிறுவனத்தில் 74 காலியிடங்கள் – ரூ.45,000/- மாத ஊதியம் || நேர்காணல் மட்டுமே!
கடந்த 2022 ஆம் ஆண்டு வாரிசு சான்றிதழ் வழங்குவதில் புதிய முறையை தமிழக அரசு அமலுக்கு கொண்டு வந்தது. இந்நிலையில் தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கான வழிகாட்டுதலில் மாற்றங்களை செய்து தமிழக அரசின் வருவாய் மற்றும் மேலாண்மை துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அரசாணை விவரங்களை தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.