ரூ. 1000 உரிமைத்தொகையால் வந்த சிக்கல் – இனி இதெல்லாம் கிடையாது!!
மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுவதால் பிற உதவித்தொகை வழங்குவதற்கு மறுப்பு தெரிவிக்கப்படுகிறது.
உரிமைத்தொகை:
தமிழகத்தில் மகளிருக்கான ரூ. 1000 உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரையிலும் நான்கு மாதத்திற்கான தொகை குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், இம்மாதத்திற்கான தொகை நேற்று அனைவரின் வங்கி கணக்கிலும் செலுத்தப்பட்டிருக்கிறது. மேலும், ரூ.1000 உரிமைத் தொகைக்கு மேல்முறையீடு செய்த குடும்பத் தலைவிகளுக்கு கடந்த மூன்று மாதத்திற்கான தொகையும் சேர்த்து மொத்தமாக ரூ.4000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் வேலைவாய்ப்பற்றோருக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நாளை (டிச.18) மின்தடை – பகுதிகள் குறித்த விவரம் உள்ளே!
இந்நிலையில், மகளிருக்கான ரூ. 1000 உரிமைத்தொகை வழங்குவதால் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை மறுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ரூ. 1000 உரிமைத் தொகை பெறும் 570-க்கும் மேற்பட்டோரின் பெயர் வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை பெறும் பெயர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால், இனி தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிருக்கு வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை கிடைக்காது என வேலைவாய்ப்புத்துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.