பழைய பான் கார்டுகள் செல்லாது.. அரசு வெளியிட்ட அதிரடி தகவல்..
வங்கிக் கணக்கு மற்றும் அதன் தொடர்புடைய நிதிச் செயல்பாடுகளை நிர்வகிக்க பான் கார்டு உதவுகிறது. மேலும், பண மோசடியை எதிர்த்துப் போராடுவதில் பான் கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் மக்களின் பாதுகாப்பு காரணமாக மத்திய அரசு பான் கார்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது உங்கள் பழைய பான் கார்டின் புதிய பதிப்பாக தற்போதைய பான் (PAN) கார்டில் ஒரு QR குறியீடு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், இந்த PAN கார்டு மேம்படுத்தலுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும். இந்த QR குறியீட்டுடன் உள்ள PAN கார்டுகளை நகல் செய்து போலியாக உருவாக்குவது மிகவும் கடினம். இதை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட PAN 2.0 கார்டு வருமான வரித் துறையால் வடிவமைக்கப்பட்டு பயனாளர் தரவை எளிதாகச் சேமிக்க அனுமதிக்கிறது. இதனால் மோசடியின் அபாயம் குறைக்கப்பட்டு நிலையான நிதி பரிவர்த்தனைகள் பராமரிக்கப்படும்.


























