வாரிசு சான்றிதழ் பெற வேண்டுமா? வெளியான புதிய வழிகாட்டுதல்கள்!!
தமிழகத்தில் வாரிசு சான்றிதழை பெறுவதற்கும் மற்றும் வழங்குவதற்கும் வழிகாட்டு நெறிமுறைகளை வருவாய்த்துறை வெளியிட்டுள்ளது.
வாரிசு சான்றிதழ்
தமிழகத்தில் அரசு வேலையில் பணிபுரியும் நபர் தனது பணியின் காலம் முடிவதற்குள் இறக்க நேரிட்டால் அவரின் அரசு வேலையானது வாரிசுதாரர்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஆனால் இதற்கு வாரிசு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். இதே போல் குடும்ப பென்ஷன் பெறுவதற்கும், சொத்துரிமை பெறுவதற்கும் வாரிசு சான்றிதழ் அவசியமானதாகும். இந்த நிலையில் வாரிசு சான்றிதழ் பெறுவது குறித்தும், வழங்குவது குறித்தும் நீதிமன்றம் உத்தரவுப்படி தமிழக வருவாய்த்துறையானது வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வருவாய்த்துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் வாரிசு சான்றிதளுக்கு விண்ணப்பிக்க இறந்தவர் முகவரியின் பகுதியில் இருக்கும் தாசில்தாரிடம் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆய்வு மேற்கொண்டு தாசில்தாருக்கு பரிந்துரை செய்வார்கள். இறுதியாக உங்களுக்கு ஒருவாரத்துக்குள் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் இறந்தவர் அந்த முகவரியில் குறைந்தபட்சமாக 1 வருடம் வசித்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.
அரசு ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு – இதை நீங்க கட்டாயம் செய்யணும்! சுற்றறிக்கை வெளியீடு!
Exams Daily Mobile App Download
இச்சான்றிதழில் இறந்தவரின் தந்தை, தாய், துணை, மகன், மகள் உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம்பெறலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் இறந்தவருக்கும் உங்களுக்கும் இருக்கும் உறவை உறுதி செய்ய சாதிச்சான்று, ஓட்டுநர் உரிமம், பிறப்புச் சான்று, பள்ளி மாற்றுச்சான்று, பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். இறந்தவர் தன் குழந்தையை தத்தெடுத்து வளர்த்திருந்தால், அக்குழந்தை சட்டப்படி தத்தெடுக்கப்பட்டதா? என தாசில்தார் ஆராய்ந்து அதன்பின்பு தான் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்