அரசு ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு – இதை நீங்க கட்டாயம் செய்யணும்! சுற்றறிக்கை வெளியீடு!
இந்தியாவில் சாலை விபத்துகளை தடுக்க போக்குவரத்து அமைச்சகம் பல்வேறு விதிகளை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தலைக்கவசம்:
இந்தியாவில் சாலைகளில் விபத்து மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்க சாலை பாதுகாப்பு விதிகள் உள்ளது. சாலைகளில் செல்லும் ஒவ்வொரு வாகனங்களும் போக்குவரத்து துறையின் விதிகளை பின்பற்றி செல்ல வேண்டியது அவசியம். ஆனால் இப்போது பிரச்சனை என்னவென்றால் மக்கள் தங்களின் அலட்சியத்தின் காரணமாக சாலை விதிகளை முறையாக பின்பற்றுவது இல்லை. அதாவது நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் வாகனத்தை இயக்குவது, தலைக்கவசம் அணியாமல் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு விதிகளை மீறும் போது எதிர்ப்பாராத விதமாக சாலை விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் அதிகம் சாலை விபத்திற்கு ஆளாகின்றனர். இதில் தலைக்கவசம் அணியாமல் பயணித்தவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழக்க நேரிடுகிறது. அதனால் மக்களின் நலன் கருதி இரு சக்கர வாகன ஓட்டுனர்களும் பின்னால் அமர்ந்திருப்போரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று போக்குவரத்து துறை காவலர்கள் சாலைகளில் ஆங்காங்கே ஒலிபெருக்கியில் அறிவுறுத்திய வண்ணம் உள்ளனர். ஆனாலும் சிலர் அதனை பின்பற்றுவது இல்லை.
தமிழக ரேஷன் கடை பணிக்கு ஆட்கள் சேர்ப்பு – சூப்பர் அறிவிப்பு !
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கை அனைத்து துறைகளுக்கும் அனுப்பட்டுள்ளது. அதன்படி இனி அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். இந்த உத்தரவு அரசு சார்பு நிறுவனங்கள், கூட்டுறவு தன்னாட்சி, சொசைட்டி நிறுவன ஊழியர்கள் என அனைவருக்கும் பொருந்தும். மேலும் ஹெல்மெட் அணிந்து வருவதை அந்த துறை செயலர்கள், இயக்குனர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்