மீண்டும் ஒரு ” ELCOT IT ” நிறுவனம்..!! நவம்பர் 4ம் தேதி திறப்பு..!! பல ஆயிரம் நபர்களுக்கு வேலை..!!
தற்போதைய இளைஞர்கள் வேலையின்மை மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு சென்று வேலை பார்த்து வருகின்றனர் . இத்தகைய வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை அமைத்து அதன் மூலம் வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பினை அளித்து வருகிறது . அந்த வகையில், கோவை மாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 114 கோடி செலவில் கட்டப்பட்ட எல்காட் ஐடி பார்க்கை நவம்பர் 4ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க உள்ளதாகவும், அதனால், 14,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


























