புதிய கல்வி வாரியம் அமைக்க முடிவு – மாநில அமைச்சரவை ஒப்புதல்!

0

புதிய கல்வி வாரியம் அமைக்க முடிவு – மாநில அமைச்சரவை ஒப்புதல்!

10 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான தனித்தனியான கல்வி வாரியங்களை ஒன்றிணைத்து புதிய கல்வி வாரியம் அமைக்க மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

புதிய கல்வி வாரியம்:

அசாம் மாநிலத்தில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு சமயங்களில் பொது அறிவியல், அசாமி மற்றும் ஆங்கிலம் உட்பட பல தேர்வுகளில் வினாத்தாள்கள் வெளியில் கசிந்தது. இதன் காரணமாக வினாத்தாள் கசிந்த பாடங்களுக்கு வேறு தேதியில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது. அசாம் மாநிலத்தைப் பொறுத்தவரை பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளை அசாம் இடைநிலை கல்வி வாரியம் வாரியமும் ( SEBA ) , 12-ஆம் வகுப்பு பொது தேர்வுகளை அசாம் மேல்நிலை கல்வி கவுன்சில் வாரியமும் ( AHSEC) நடத்துகின்றன. தற்போது மாநிலத்தில் பள்ளி கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் மற்றும் மேற்பார்வை இடவும் வசதியாகவும் இரண்டு கல்வி வாரியங்களையும் ஒன்றிணைக்க மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்வு? – இயக்குனர் கொடுத்த விளக்கம்!

அதன்படி SEBA மற்றும் AHSEC இரண்டு வாரியங்களையும் ஒன்றிணைத்து அசாம் மாநில பள்ளி கல்வி வாரியம் ( ASSEB) அமைக்க முதல்வர் தலைமையிலான மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர் ஆசிரியர் விகிதங்களை பேணுவதற்கும், மனித வளத்தை சரியாக பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கும், முக்கிய விதிகளில் திருத்தம் செய்வதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!