தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்வு? – இயக்குனர் கொடுத்த விளக்கம்!
தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது என ஆவின் இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆவின் பால்
தமிழகத்தில் தினமும் 33 லட்சம் லிட்டர் பால் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்தி ஒன்று வெளியானது. அது குறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆவின் பால் விலை உயர்வு என்னும் தலைப்பில் டிவியில் 200 மி.லி பாக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் பால் இன்று முதல் வயலட் (Violet) நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் செய்தி வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் காய்கறிகளின் விலை கடும் உயர்வு – பொதுமக்கள் அவதி!!
இந்நிலையில் ஆவின் டிலைட் 500 மி.லி பாக்கெட்டுகள் தொடர்ந்து பழைய விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. தொடர்ந்து ஆவின் டிலைட் பால் விற்பனை அதிகரித்து இருக்கிறதே தவிர குறையவில்லை என தெரிவித்து கொள்கிறோம். மேலும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சமன்படுத்திய பால் (T.M), நிறை கொழுப்பு பால் (FCM) மற்றும் ஆவின் டிலைட் 500 மிலி பாக்கெட்டுகள் விலையில் மாற்றமில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.