தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு – சவரன் ரூ.45,600க்கு விற்பனை!!
தீபாவளிக்கு பிறகு தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை:
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. ஆனால், தற்போது தங்கத்தின் விலை மீண்டும் உயர துவங்கியுள்ளது. அதன்படி, நேற்று சென்னையில் நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6105க்கும், சவரனுக்கு ரூ.48,840க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5635க்கும், சவரனுக்கு ரூ.45,080க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
புதிய கல்வி வாரியம் அமைக்க முடிவு – மாநில அமைச்சரவை ஒப்புதல்!
நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது சென்னையில் இன்று தங்கத்தின் விலை சற்று உயர்ந்திருக்கிறது. அதன்படி, இன்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ரூ.6170க்கும், சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.49,360க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ரூ. 5700க்கும், சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.45,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.78க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று நாளில் ரூ.1.50 காசுகள் உயர்ந்து ரூ.79.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.