ஆதார் கார்டு போலவே பள்ளி மாணவர்களுக்கான அடையாள அட்டை – மத்திய அரசு திட்டம்!!
ஆதார் கார்டு போலவே பள்ளி மாணவர்களுக்கென அபார் என்கிற அடையாள அட்டையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அபார் அட்டை:
இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு மிக முக்கிய அடையாள ஆவணமாக விளங்கி வருகிறது. அரசின் சலுகைகளை பெறுவது முதல் கடனுதவி, வங்கி சேவைகள் என அனைத்திற்கும் ஆதார் கார்டு இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அதனால், தான் மத்திய அரசு அவ்வப்போது ஆதார் கார்டினை அப்டேட் செய்துகொள்ளும்படி வலியுறுத்தி வருகிறது. இந்த ஆதார் கார்டு போலவே, ஒவ்வொரு பள்ளி மாணவர்களுக்கும் அபார் என்கிற தனித்துவ அடையாள அட்டையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சிறப்பு ஊக்கத்தொகை.. அரசு ஆலோசனை!
இந்த அபார் அடையாள அட்டை மூலமாக மாணவர்களின் கல்வி விவரங்களை அறிந்து கொள்ளலாம். அதாவது, ஆதார் கார்டில் குடிமகனின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்படும் படியாக ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட தகவல்கள், கல்வி விவரங்கள் மற்றும் திறமைகள் அனைத்தும் அபார் கார்டில் பதிவு செய்யப்படும்.